தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் 36 மாவட்ட பதிவாளர்கள் உட்பட ஏராளமான சார் பதிவாளர்களும் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சென்னை, நெல்லை மண்டலங்களில் மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு அலுவலங்களில் லஞ்சப் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில்,அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.