அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.