திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல் போன்றவை வந்தால் இதுபோன்ற போலி மருத்துவர்களிடம் போகாமல், சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.