மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது