கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் மழைநீர் முற்றிலும் வடிந்துவிட்டது. மற்ற இடங்களிலும் நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.