முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இன்று நடந்த வழக்கு விசாரணையில் காணொளி மூலம் ஆஜரான செந்தில்பாலாஜியின் காவலை 27வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ள நிலையில் இன்று நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.