மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சாய்பாபா காலனியில் உள்ள C-3 காவல் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு அவர் சாலை வழியாக பயணித்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இந்த சாலைப் பேரணியானது சுமார் ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சாலை ஓரங்களில் அவரை வரவேற்க தொண்டர்கள் கூடினார்கள். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் காவி துண்டு அணிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காவி துண்டு மாற்றப்பட்டு வெள்ளை துண்டு அணியப்பட்டுள்ளது.