கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் ஜீப் டிரைவர் உட்பட 4 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.  படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாலை 3.30 மணியளவில் தொழிலாளர்கள் வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.