புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறும்.

அதனால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் எழுத்து தேர்வு நடைபெறும் போது எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெறுவதற்கு பள்ளி முதல்வர்கள் உதவ வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.