கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே கிராம ஒன்றுக்கு 5600 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து 77.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.