கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டு என்னும் பணியைத் தொடர்ந்து 36 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.