கூட்டணி இடப்பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும், காரைக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அங்கு பாஜக நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பொறுப்பை ஏற்ற கையோடு, அவர் பூத் மற்றும் வார்டு வாரியாக மக்களைச் சந்திப்பதோடு, பல்வேறு சமுதாயத் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டத் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.