ஈரானின் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பொதுமக்கள் 73க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஈரானில் முன்னாள் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நினைவிடம் அருகே இந்த  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2020 இல் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் பலியான ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நினைவு தினமான இன்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நினைவு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 73-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் 171க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ஈரானின் கெர்மான் நகரில் உள்ள சாஹேப் அல் ஜமான் மசூதி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது..

https://twitter.com/Schulla007/status/1742536282205782372

https://twitter.com/conflict_live/status/1742536429178384778