தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு துறையிலும் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு சீருடைப்படி 4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதல் பஸ் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ளது போல ஆவடி மற்றும் தாம்பரம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு படி 300 ரூபாய் வழங்கப்படும். சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும். புதிதாக மூன்று பெரு நகர காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அடுத்தடுத்து அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.