தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப அதற்கு திமுக அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அதே சமயம் துறை வாரியாக புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையை வழங்கினார்.

அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே 7ஆம் தேதி ஆட்சி பொறுப்பு ஏற்றேன். மோசமான நிதி நெருக்கடியில் ஆட்சிக்கு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். திமுக மக்கள் நெஞ்சங்களை வென்றுள்ளது. இது ஸ்டாலின் அரசோ திமுக அரசோ அல்ல. இது ஒரு இனத்தின் அரசு, மக்கள் அரசு. தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என மக்கள் எண்ணுகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.