2021 தேர்தலின் வேட்புமனுவில் EPS சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடர்ந்த வழக்கில், அவரிடம் விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.