சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும் தேதி போன்றவற்றை அறிவித்தார். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

அதன் பிறகு 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 19-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதியும் பொது தேர்வுகள் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.