தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.