மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் கண்டு என் இதயம் நொறுங்கி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷ தனமும் வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர் மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.