டெல்லி மெட்ரோவில் எப்போதும் சண்டைகள் அல்லது வினோதமான வீடியோக்களே வைரலாகும் நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது மனதை வென்றுள்ளது.

டெல்லி மெட்ரோ நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரரிடம், ஒரு சிறுவன் மிகுந்த மரியாதையுடன் சல்யூட் செய்து, பின்னர் குனிந்து அவரது கால்களைத் தொட்டு வணங்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகமே தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை ஒரு சிறுவன் உணர்ந்து காட்டும் இந்த அன்பான செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குட்டிப் பையனின் செயலைக் கண்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர், மிகுந்த அன்புடன் அவனுக்குப் பதிலளித்து உற்சாகப்படுத்தினார். இந்தச் சிறிய சந்திப்பு, பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே உள்ள நம்பிக்கையையும் பிணைப்பையும் வெளிப்படுத்துவதாக சி.ஐ.எஸ்.எஃப் குறிப்பிட்டுள்ளது.

“>

 

சமூக வலைதளங்களில் பலரும் அந்தச் சிறுவனின் சிறந்த வளர்ப்பையும், அவனுக்குக் கற்பிக்கப்பட்ட நற்பண்புகளையும் பாராட்டி வருகின்றனர். எதிர்மறையான செய்திகள் நிறைந்த இணையத்தில், இத்தகைய நேர்மறையான மற்றும் மனதைத் தொடும் காட்சி பலருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.