ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . திருப்பதி, கடப்பா மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் இயக்க தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் NIA சோதனை நடத்தி வருகின்றது. அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் NIA தற்போது சோதனை நடத்தி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.