பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்துவதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், மருத்துமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.