தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆறாம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 70 ஆயிரத்து 326 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி நாளாகும். இந்த நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மே 28 முதல் 30-ம் தேதி வரை, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் 20ஆம் தேதி வரையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.