ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணையை தேர்வாணைய இணையத்தில் பெறலாம். இதில், கலந்துக்கொள்ள தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது.