தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி மற்றும் சிசிடிவி பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது