சென்னை பெரம்பூரில் இபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவனை மர்ம கும்ப கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பெரம்பூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி தெற்குச் செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு அவர் கோவில் தெருவில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

அதில் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை இபிஎஸ் இன்று சட்டமன்றத்தில் எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.