இந்தியாவில் மீண்டும் கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அச்சத்தை பரப்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.