ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று இலவச தரிசன டிக்கெட் வரிசையில் 30 மணி நேரமாக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வரிசை 7 கிலோமீட்டர் அளவுக்கு உள்ளதாகவும், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.