கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேரில் வந்து திறந்து வைத்தார். இதேபோன்று தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை போன்ற 9 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக கட்சியின் அலுவலகங்களையும் ஜே.பி நட்டா காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, தியாகத்திற்கு பெயர் போன கட்சி பாஜக. பாஜக அரசின் திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது. மாநில தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு மக்கள் அளித்த சான்று. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.