பாஜக மாநில தலைவரான அண்ணாமலை வீட்டிற்கு அறிக்கையில் பாஜக கொடி பறக்க விடுவதற்காக அனுமதியில்லாமல் புதிதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமலும், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைந்த  வழக்கில்  பாஜகவை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டியை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்பாக அமர் பிரசாத்ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளார்.நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 113 இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  கன்னியப்பன்,   பாலமுருகன்,  செந்தில் குமார்,  சுரேந்திர குமார்,  வினோத்குமார் ஆகிய 5 பேரை கைது செய்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சற்று நேரத்துக்கு முன்பாக அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.