தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிம், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பெரம்பூர் டான் பாஸ்போ பள்ளியில் அரசு நிர்ணயத்தை கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக மாணவரிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து தனி குழு விசாரணை செய்யப்பட்டது.

அதில் அரசு நிர்ணயம்  செய்யப்பட்ட கட்டணமே வசூல் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கல்வி துறையின் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அரசு நிர்ணயத்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.