மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து. மெரினாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தமிமுன் அன்சாரி உட்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கூடுதல், முற்போக்கு அமைப்புகள் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.