தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் அரசு பள்ளி ஆசிரியரான மாசாணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் 9,900 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை மாசாணம் வங்கியில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது குமாரசாமிபேட்டையில் வசிக்கும் ஒரு பெண் பணம் எடுக்க காத்திருந்தபோது, தாமதமானதால் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி அதிகாரிகள் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட மாசாணத்தை வங்கி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.