தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிலம்பரசு ஆம்புலன்சில் அங்கு சென்று சாலையோரம் கிடந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த நபர் சிலம்பரசுவையும் ஆம்புலன்ஸ் டிரைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். மேலும் அவர் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிலம்பரசு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தகராறில் ஈடுபட்ட முருகன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.