விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தேவியின் தம்பி துணை ராணுவ வீரரான மணிமாறன் பாலமுருகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிமாறனை கைது செய்தனர்.