ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தசிமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேடு  371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் இன்று மாநிலம் தழுவிய பந்த்  நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. குப்பம் பகுதியில் இருந்து தமிழகம் மற்றும் திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றது.