ஜோலார்பேட்டை மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி விரைவு ரயில் நாளை முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 12, 13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் மறு மார்க்கமாக திருப்பதி மற்றும் சென்னை சென்ட்ரலுக்கு செப்டம்பர் 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.

அதனைப் போலவே சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு மைசூருக்கு இயக்கப்படும் காவிரி விரைவு ரயில், மறு மார்க்கமாக மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  கேரளத்திலிருந்து வரும் ரயில்கள் உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி பெங்களூர் செல்லும் விரைவு ரயில் வழக்கமாக இரவு 10.50 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.