ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் ஆந்திர எல்லை மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இன்று ஆந்திராவிற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.