Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே  இருப்பதனால் விலை உயர உயர வட்டி மூலமாக அதிக லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். தங்கப்பத்திரம் வாங்கி எட்டு வருடங்கள் வைத்திருக்கலாம். எட்டு வருடம் முடிந்த பிறகு வருமானத்திற்கு வரி செலுத்த தேவை கிடையாது. இந்நிலையில் தங்கப் பத்திர விற்பனையின் அடுத்த தவணை  இன்று  காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. RBI சார்பில் விற்பனை செய்யப்படும் இந்தப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, அதோடு ஆண்டுக்கு 2.5% வட்டி தருபவை. இந்த தவணைக்கான விற்பனை விலை, கிராம் ஒன்றுக்கு 5,923 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு 350 தள்ளுபடி உண்டு. 15ஆம் தேதி வரை இந்தப் பத்திரங்களை வாங்கலாம்