திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், போதை தடுப்பு, குழந்தை திருமணம், போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.