தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையிலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், தளவாய்புரம், பரமன்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதே போல ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.