அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கணக்கம்பாளையம் கிராமத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி இனிமேல் மது குடிக்க கூடாது என கூறி கணவரிடம் சத்தியம் வாங்கியதாக தெரிகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் அழகர் மது பாட்டலுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அழகர் தனதுஉறவினர்களான தனசேகர், அகல்யா ஆகியோருடன் இணைந்து ராஜலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனசேகர், அழகர், அகல்யா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.