புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை மோகனிடம் கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன் கடந்த 2019-ஆம் ஆண்டு மகாலட்சுமியை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா மோகனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.