தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அப்போது தப்பி ஓட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருக்கோவிலூரைச் சேர்ந்த சேவியர் என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான மஞ்சுநாத் என்பவரது தூண்டுதலின் பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் சேவியர் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.