தென் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அணி சார்பில் 60 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மாணவி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த மாணவியை திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து சங்க தலைவரும் ஜி.டி.என் கல்லூரி தாளாளருமான ரத்தினம், மாவட்ட குத்து சண்டை சங்க துணை தலைவர் ஞான குரு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாத்திமா மேரி, மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.