அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணிப்புரிந்தவர் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை. அப்போது இவர் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்காக உயர்நீதிமன்றத்திலும், சமரச தீர்ப்பாயத்திலும் ஆஜரானார். இதற்காக தனக்கு கடந்த 2018ம் வருடம் ஆகஸ்டு 6-ம் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடி 94 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 680-ஐ வழக்கறிஞர் கட்டணம் வழங்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். எனினும் அது பரீசிலிக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் 3 வழக்குகளை தொடர்ந்தார்.

இந்நிலையில் அரசு வழக்கறிஞர்களுக்கான தமிழக அரசின் கட்டண வரம்பு நிர்ணய உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆர்பிட்ரேசன் வழக்குகளில் ஆஜரானதற்கான கட்டண தொகையை அளிக்க உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை கொடுத்த வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.