வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டாக்காவில் இருந்து தன் கணவர் முஹம்மது அபுவுடன் விமானம் வாயிலாக குர்ஸிதா பேகம் என்ற பெண் சென்னை வந்துள்ளார். அப்போது நடுவானில் அப்பெண்ணுக்கு திடீரென்று கடும் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விமானம் சென்னையில் தரை இறங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இவ்வாறு சென்னை விமானத்தில் பெண் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.