உலகம் முழுவதும் இன்று(மார்ச்-8) மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி பிரதமர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது ஆகும். பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணிபுரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களுக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு, அலுவலகங்களுக்கு பெண்கள் 15 நிமிடம் தாமதமாக வந்தாலும் பணியில் இணைக்க நேர நீட்டிப்பு, பெண்கள் பாதுகாப்புக்கு என தனிப்படை ஆகியவை ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு பெற்றுக்கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்