தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக பாஜகவில் முக்கிய பங்கு வகித்து வந்த நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் பதிவிட்ட கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது. அப்போது தான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இயலும் என அவர் குறிப்பிட்டுள்ள பதிவு வைரலாகி உள்ளது.