சென்னையில் நடைபெற்ற AR.ரஹ்மான் கச்சேரியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் ரசிகர்கள் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், 40,000 பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பேட்டி கொடுத்திருக்கிறார். 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில் இந்த குளறுபடி, மேலாண்மை குறைபாடால் ஏற்பட்டதா? அல்லது மோசடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுனாமி போல் வந்த ரசிகர்களை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது என்னை வெகுவாக பாதித்துள்ளது. ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு பொறுப்பேற்கிறேன் என்று முன்னதாக AR ரஹ்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.